Category: முதலாளித்துவம்
முதலாளித்துவ நெருக்கடியின் பாரமும், பாட்டாளிகள் திருப்பியடிக்கும் தேவையும்!
இன்றைய சூழலில் தற்காப்பு மனநிலை மட்டும் போதுமானதல்ல. நம் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நான்குச் சட்டத் தொகுப்புகளை எதிர்த்துக் கிளர்ந்தெழ வேண்டும். இந்தப் போராட்டம், சட்டத் தொகுப்புகளைத் தோற்கடிப்பதோடு நில்லாமல், முதலாளித்துவ அமைப்பையே மாற்றியமைப்பதாக அமைந்திட வேண்டும்.
பொருளாதார நோபல் 2025 – விமர்சனப் பார்வை
அறிவியல் வளர்ச்சியின் மீது முதலாளித்துவம் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி, நிலையான, அனைவருக்கும் பயனாகும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்தை அடைய நமக்கு உதவுவது மார்க்சிய கோட்பாடு மட்டுமே. [நோபல் பரிசு வென்ற] ஷும்பீட்டரியன் கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சுரண்டலை தீவிரப்படுத்தும் கொள்கை மட்டுமே!
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்
முதலாளித்துவ விமர்சகர்களும், அதன் ஊதுகுழல்களாக இருப்பவர்களும், எப்போதும் பொது வேலைநிறுத்தங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை பரப்புவதன் மூலம், அதன் பார்வையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளனர்; அவர்களில் பாதி பேர் அதன் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்புகையில், மீதமுள்ளவர்கள், அதனால் “பாதிக்கப்பட்ட” ஏழை மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்து புலம்புகின்றனர். அவர்களின் பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்குமான ஒரே பதிலாக அமைவது, வர்க்க உணர்வின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் வர்க்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதேயாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



