Category: அரசியல்
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்
1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்திய தொழில் வளர்ச்சியும், கம்யூனிஸ்ட்டுகளும்
1952 ல் தேர்வு செய்யப் பட்ட நாடாளுமன்றவுறுப்பினர்களில் கம்யூனிஸ்ட்டுகள் இரண்டாவது இடத்தில் இருந்தனர். இதை இந்திய வளர்ச்சிக்கான ஆக்கப் பூர்வமான பங்களிப்பு செய்யவும் பயன்படுத்தினர். அதில் மிக முக்கியமானவை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், மின்சார தயாரிப்பு மற்றும் இரும்பு உருக்காலை, சேலத்தில் அமைப்பது ஆகியவை முக்கியமானதாகும். இதில் பி. ராமமூர்த்தி முக்கிய பங்களிப்பு செய்தார். திருச்சியில் பெல் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைவதில் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பின் மூலம் அனந்த நம்பியார் நிறைவேற்றினார்.
பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்
சீத்தாராம்யெச்சூரி (பிரடெரிக் எங்கெல்ஸின் 200 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாரதி புத்தகாலயம்முன்னெடுக்கும் சிவப்பு புத்தக தினத்திற்காக (நவம்பர் 28, 2020) கம்யூனிசத்தின்கோட்பாடுகள்நூலின் புதிய தமிழ் பதிப்பினை வெளியிட்டு தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் குறிப்பில் இருந்து) பிரெடெரிக் எங்கெல்ஸ் உலகத்தின் முதல் மார்க்சியவாதி என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஒருவேளை எங்கெல்ஸ் இதனை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனாலும், இவ்வாறு முதல் மார்க்சியவாதி என குறிப்பிடுவது, அவரை மார்க்சிற்கு இளைய பங்காளியாக பார்ப்பதாகிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும். “மார்க்ஸ்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
