Category: இதழ் பெட்டகம்
மோடி அலை… வீசுமா?
அரசியலில் ஒரு வாரம் என்பது நீண்ட காலம் என பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஹெரால்ட் வில்சன் ஒருமுறை கூறினார். நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என பா.ஜ.க அறிவித்து (13.09.2013) சில வாரங்களில் இந்திய அரசியல் தொடர்பான விவாதங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் ஆழமடையும் இந்திய பொருளாதார நெருக்கடியும்
கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் இந்த வீழ்ச்சி, வேகம் அடைந்துள்ளது. ஜனவரி 2012 இல் ஒரு அமெரிக்க டாலருக்கு 44 ரூபாய் என்று இருந்த நிலை மாறி 2013 செப்டம்பர் துவக்கத்தில் 68 என்று அதிகரித்தது. அதாவது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவு. அதிலும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி 15 நாட்களில் மட்டும் 25% சரிவு. இது ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. மத்திய அரசு தினம் ஒரு குழப்பமான அறிக்கைவிட்ட வண்ணம் உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பு ஏற்றவுடன், நம்பிக்கை அடிப்படையில் ரூபாய் மதிப்பு சிறிது அளவு மீட்சி அடைந்துள்ளது. மீட்சி தொடருமா? என்ன நடக்கிறது? ஏன் நடக்கிறது? செய்ய வேண்டியது என்ன? நாம் காணும் நிகழ்வுகள் மக்களை எப்படி பாதிக்கும்? ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள தற்கும் இந்திய பொருளாதார கட்டமைப்பு மற்றும் அரசின் கொள்கைகள் ஆகியவற்றிற்கும் என்ன தொடர்பு? பிரச்சினைக்குக் காரணம் பன்னாட்டு நிகழ்வுகள்தானா? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன.
தீண்டாமை ஒழிப்புப் போரில் கம்யூனிஸ்டுகள்
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படாத இந்திய உபகண்டத்தின் தனித்தன்மையே இந்த சாதியமைப்பு. இந்திய சமூகத்தில் சாதி உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இதன் துவக்கம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இந்தியாவில் வர்க்க சமுதாயம் துவங்கிய போது அது வருண சமுதாயமாகவே அமைந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
