Author: Editorial
பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!
வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய
பண்டைய பண்பாடும் ஆய்வுகளும்
இன்று, நாம் எத்தகைய பண்பாட்டை இளைய சமூகம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டமும், மொழி குறித்த பாதுகாப்புணர்வும், தமிழ் பற்றுருதியும் எண்ணற்ற ஆய்வு நூல்கள் வெளிவர காரணமாக அமைந்தன தமிழ் பற்றால் தமிழ் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கிய, இலக்கண வளம் குறித்த ஆய்வுகளின் வெளிப்பாடாக தமிழ் சமுதாயம் குறித்த உயரிய மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டன. இம்மதிப்பீட்டால் சங்க காலம், பொற்காலமென பறைசாற்றப் பட்டது.
அறிவியலும் இறைஞான அனுபவமும்!
மனம் திறக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் அருள்வாக்கு இது. குமுதம் வார இதழில் (29.06.2005) இவர் வெளியிடும் இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சரிதானே எனத் தோன்றும். மனம் மரபு என்ற சிறைபடாமல்; இனம் மொழி, ஜாதி என்ற குறுகிய மனப்பான்மை விடுத்து திறந்த மனது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் மனம் திறக்கட்டும் என்பது இது அல்ல! பகுத்தறிவு என்ற வரைமுறை விடுத்து மனம் திறந்து உள்ளுணர்வுகளை ஏற்க விடுக்கும் அறைகூவலே
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
