Author: Editorial
டிஜிட்டல் பொருளாதாரத்தில் பணி உறவுகள் மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள சிக்கல்கள்
ஆர். எஸ். செண்பகம் 2025ஆம் ஆண்டில், 850 லட்சம் வேலைகள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உழைப்புப் பிரிவின் மாற்றத்தால் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், 970 லட்சம் புதிய வகை வேலைகள் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரித முறைகளுக்கு இடையிலான புதிய உழைப்புப் பிரிவுக்கு ஏற்றதாக மாற்றமடையச் செய்யப்படும் என்றும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில், மனிதனும் இயந்திரமும் சமமான நேரத்தை வேலையில் செலவிடுவார்கள் எனவும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது.
விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள்
பேரா. கா. அ. மணிக்குமார் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தேக்க நிலைக்குக் காலனி ஆதிக்கச் சுரண்டல் கொள்கையே காரணம் என்பதை முதலில் சுட்டிக்காட்டியவர்கள் தாதாபாய் நௌரோஜி, ரொமேஷ் சந்திர தத், எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே போன்ற அறிஞர்களே. இந்தியத் தொழில் அழிவிற்கு அந்நியர் ஆட்சிதான் காரணம் என்பதை அவர்கள் ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டினர். நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சியை இணைத்துப் பார்க்கக் கூடிய பார்வை இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் 19ஆம்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத் தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா 1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும். உலக முதலாளித்துவம் சோசலிசத்தின்
