இந்திய விடுதலையும் அரசியல் களமும்
இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் பொருளாதார சுரண்டல் முறையை பாதுகாக்கும் சமூக ஒடுக்குமுறையை பாதுகாக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் எடுக்கும் முயற்சிக்கு, சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இதை எப்படி புரிந்து கொண்டிருந்தாலும், மார்க்சீயம், கருத்தியல் மற்றும் அரசியல் கண்ணோட்டத்தில் மேற்கண்ட கடமையை நிறைவேற்றும் அரசியல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது.
ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல்
பண்ணை அடிமையை எதிர்த்த போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி
1964ம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல தோழர்களுடன் வெளியேறிவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதில் முழு மூச்சுடன் செயலாற்றினார். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்னறை ஆண்டுக்காலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1975ம் ஆண்டில் அவசர நிலை பிரகடனத்தின் போதும் பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9மாதம் சிறைவாசம் அனுபவித்தார். ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். தமிழகத்தில் அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர் பிஎஸ்.தனுஷ்கோடி.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


