நாணய மாற்றுதலை – தறிகெட்டு அலையவிடலாமா?
நாணய மாற்றுதலில் (மணி – கன்வெர்ட்டபிலிட்டி) தாராள மயத்தை முழுமையாகப் புகுத்த மீண்டும் ஒரு முயற்சி நடக்கிறது. இதனை ஒட்டி ஒரு சூடான சர்ச்சை அரசாங்க மேல்மட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைகளில் பங்கு பெறுவோர் அமைச்சர்கள், மேல்மட்ட அதிகாரிகள், அரசிடம் சம்பளம் பெறும் நிபுணர்கள், வங்கிகளின் தலைமைப் பீடங்கள், இவர்களோடு எல்லா வகையிலும், நெருக்கமாக குடும்பப் பாசத்தோடு இருக்கும் பெரு முதலாளிகளிடம் சேவகம் செய்யவே பிறப்பெடுத்த கொழுத்த சம்பளம் பெறும் மூளைகள் இவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக நிற்கிறார்கள்.
தனியார்மயத்தால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு?
தண்ணீரில் நாம் காணும் நெருக்கடி உலகளவிலான தனியார்மய சூழலாகும். இது மக்களின் அடிப்படை உரிமையாக நீரை கருத வேண்டும் என்ற கோட்பாட்டிற்கும் தண்ணீரை வைத்து சுரண்டும் உரிமை வழங்கினால் தான் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த இயலும் என்ற கோட்பாட்டிற்கும் நடக்கிற போராட்டமாகும். சமீபத்தில் மெக்ஸிகோவில் கூடிய உலக நாடுகளின் தண்ணீர் பற்றிய மாநாட்டில், பெரும்பாலான அரசுகள் குடிநீரை, அடிப்படை உரிமையாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருத்தை முன்வைத்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு – ஆரம்ப கால ஆண்டுகள் (1920 – 1933)
1924ம் ஆண்டு லெனின் மறைவுக்குப்பிறகு, ராய் தனது அதிதீவிரவாதக் கருத்துக்களை அகிலத்தின் 5வது மாநாட்டில் முன்வைத்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளிகளின் பங்கினை நிராகரிக்கும் போக்கும், சுரண்டப்பட்ட வர்க்கங்களின் புரட்சிகரமான உணர்வு பற்றிய அவரின் அதீத மதிப்பீடும் அதில் தெரிந்தது. ஆனால், அகிலம் அதை நிராகரித்தது. காலனி நாடுகளில் கூட்டு செயல்பாட்டின் தேவையினை உறுதி செய்தது. பின்பு சோவியத் கம்யுனிஸ்ட் கட்சியின் 14வது மாநாட்டில் தோழர். ஸ்டாலின் காலனி நாடுகளின் கம்யூனிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தில் உள்ள புரட்சிகரமான பிரிவினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதும் கவனத்துக்குரியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



