Tag: ஏகாதிபத்தியம்
டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ் முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம் “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி
திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி : புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி !
இரா. சிந்தன் திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி! இரா. சிந்தன் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நூலாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வெங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவிடங்களை நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1908 திருநெல்வேலி எழுச்சி, தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியாகும். அந்த எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றும்
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி – மறுமலர்ச்சிக்கான மக்களின் நம்பிக்கை!
அருண் குமார் இலங்கை ஜனாதிபதி தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் உலகளாவிய சூழ்நிலையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். பல நாடுகளில் வலதுசாரி அல்லது தீவிர வலதுசாரி சக்திகள் அதிகாரத்தின் மையத்தை கைப்பற்றுவதைக் காணமுடிகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அண்மைய எடுத்துக்காட்டாகும். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, இலங்கையில் ஜனதா விமுக்தி பெருமன (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (NPP) குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜனதா விமுக்தி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
