Tag: உழைக்கும் வர்க்கம்
திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி : புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி !
இரா. சிந்தன் திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி! இரா. சிந்தன் ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நூலாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வெங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவிடங்களை நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 1908 திருநெல்வேலி எழுச்சி, தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியாகும். அந்த எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றும்
உழைக்கும் வர்க்க இயக்கமும் பெண்களின் பங்களிப்பும்
இந்தியாவிலும், உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டமைப்பதில் பெண்கள் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி இயக்கத்தில், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்கள் ஆவர். விமலா ரணதிவே, அஹல்யா ரங்கனேகர், தமிழகத்தில், விவசாய தொழிலாளிகளை கிராமம் கிராமமாக சென்று ஒன்று திரட்டி அவர்களது குரலை சட்டமன்றத்தில் ஒலிக்க செய்த கே.பி. ஜானகி அம்மாள், ரயில்வே தொழிலாளர் போராட்டம் தொடங்கி பல உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பெரிதும் அறியப்படாத திண்டுக்கல் ஆக்னஸ் மேரி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
