Tag: தமிழ் இலக்கியம்
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்
‘சுரங்கம்’ நாவல்: ஒரு ஆய்வு !
பிகாஸ் விகாஸ் என்னும் வங்கமொழிப் பதத்திற்கு ‘வெளிச்சம்’, ‘பிரகாசம்’, ‘வளர்ச்சி’ என பல பொருள் உண்டு. சுரங்க வாயிலில் வெளிச்சம் பரவி, நிரந்தர விடியல் காணும் இந்த புதினத்தின் வெற்றியையும் அவ்வாறே சொல்லலாம். வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வில் விளைந்த இந்த நாவல், தமிழில் வெளியானது. பல்வேறு வட்டார மொழிகளில் வெளியாகி உணர்வூட்டுகிறது. அதில்தான் அதன் வெற்றி அடங்கியுள்ளது.
இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்
வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

