Tag: மக்கள் ஜனநாயகப் புரட்சி
மக்கள் ஜனநாயகத்தை, சோசலிசத்தை நோக்கி முன்னேறுவோம்
பிரகாஷ் காரத் கட்சியின் அரசியல் பணிகளுக்கான திசைவழியைத் தீர்மானிக்கிற அரசியல்-நடைமுறை உத்தியை உருவாக்குவது, கட்சிக் காங்கிரசின் முக்கியமான பணியாகும். இதற்கு, இன்று நிலவுகிற அரசியல் நிலைமை, அரசு மற்றும் ஆளும் கட்சியின் வர்க்க இயல்பு மற்றும் தற்போதுள்ள வர்க்க சக்திகளின் சம நிலை ஆகியவற்றின் சாராம்சத்தை துல்லியமாகப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்த பயிற்சி சில நேரங்களில் சிக்கலான ஒன்றாக இருக்கலாம். ஆனால், தற்போதைய தருணத்தில், இது ஒப்பீட்டளவில் எளிமையானதாகும். மூன்று கேள்விகள் மூன்று கேள்விகளை மட்டும்
தொழிலாளி விவசாயி ஒற்றுமையின்அவசியம்
உ. வாசுகி தொழிலாளி விவசாயி கூட்டணி குறித்து கட்சி திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு. மக்கள் ஜனநாயக புரட்சி, அதற்கான மக்கள் ஜனநாயக முன்னணி என்று கட்சித் திட்டம் பேசும் இடத்தில், மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம்பெறும் வர்க்கங்கள் பட்டியலிடப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தலைமை ஏற்கும் என்று சொல்வதோடு, திட்டத்தின் 7.6 பத்தி, “தொழிலாளி விவசாயி வர்க்கங்களின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானது, அடித்தளமானது. ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்த, இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில், இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் என்பது, தொழிலாளி
கட்சி அமைப்பின் அவசியம்!
நமது கட்சியின் அகில இந்திய 18வது மாநாடு நடத்திய கட்சி அமைப்பு பற்றிய பரிசீலனை அறிக்கையின் கோடிட்டு காட்ட வேண்டிய பகுதி என்று எங்களுக்கு பட்டதை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் மனதை கவ்விப்பிடிக்கும் ஒர புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சியாக நாம் உயர அயராது பாடுபட வேண்டியுள்ளது. இன்றைய பலகீனத்தை களைந்து, நாடு தழுவிய அளவில் நமது செயல் விரிவடைய வேண்டுமானால், திட்டமிட்ட செயல் பாடுகள் அவசியமாகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
