Tag: மதச்சார்பின்மை
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது.
ஜவஹர்லால் நேரு: அனைத்திற்கும் மேலாக, மதச்சார்பற்றவர் …
மதசார்பற்றதொரு அரசுக்கான நேருவின் தொலைநோக்கும் ஜனநாயக பூர்வமான வழிகளின் மூலம் அத்தகைய ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகளும் என்றும் நிலைத்து நிற்கும் அவரது பாரம்பரியங்களாகத் திகழ்கின்றன. இவை அனைத்துமே இப்போது நேருவின் மிகப் பழைய எதிரிகளான இந்துத்துவ வாதிகளிடமிருந்து மோசமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. நேருவின் இந்தப் பாரம்பரியம்தான் நாம் பாதுகாத்து, வளர்த்தெடுக்க வேண்டிய ஒன்றாகும்.
மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி
மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
