Tag: மார்க்சியம்
இலக்கியம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்
வரலாறு பற்றிய பொருளியல் வாதக் கோட்பாட்டின் படி வரலாற்றை இறுதியாகத் தீர்மானிக்கிற காரணி மெய்யான வாழ்வை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதுதான். இதற்கு மேல் நானோ, மார்க்சோ ஒரு பொழுதும் சொன்னதில்லை. இதையே, வரலாற்றைத் தீர்மானிக்கிற ஒரே காரணி பொருளாதாரக் காரணிதான் என எவரேனும் திரித்துக் கூறுவாரேயானால் அவர் இந்தக் கோட்பாட்டையே அர்த்த மற்றதாக, புரியாததாக, பைத்தியக்காரத்தனமானதாக ஆக்கிவிடுகிறார்.
மார்க்சியம் குறித்த பின்நவீனத்துவர்களின் விமர்சனம்
பின்நவீனவாதிகள் ஒழுங்கின்மையை கொண்டாடுகிறார்கள்; கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு என்பதெல்லாம் அதிகாரத்தின் ஆட்சியை பறைசாற்றுவது என்பது அவர்களது எண்ணம். ஒவ்வொரு முனையிலும் ஒழுங்கற்று நின்றுக் கொண்டு, ஒவ்வொரு முனையும் ஒரு அதிகார மையமோ என்ற சந்தேகத்தை சாதாரண மனிதனுக்கு கிளப்பும் வண்ணம், ஒழுங்குத் தன்மையை ஒரு செயல் ஒழுங்கோடு எதிர்பார்கள். கட்டுப்பாடுடன் இருக்கிறது என மார்க்சிய செல்நெறிக்கு எதிராய் குரல் எழுப்புவது என்றால், பின்நவீனதுவ வாதிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். தங்கள் பிறவிக்கடன் நிறைவேறியது போல் பக்தி சிரத்துடன், அந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

