Tag: லெனின்
வாழ்வா, சாவா போராட்டத்தின் மற்றொரு களம்
– என்.குணசேகரன். லெனின் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்”என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார்.1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது. இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்க அரசு ஆட்சிக்கு வந்தது.அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார்.இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த
புதிய பொருளாதாரக் கொள்கை, சோவியத் செய்த முயற்சியும், இன்றைய உலகமய தாக்குதலும் ….
(1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்றபின் புதிய பொருளாதாரக் கொள்கை முன்வைக்கப்பட்டு அது தொடர்யது பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தப் பட்டுவருகிறது. அதனை நாம் எதிர்க்கும்போது 1921 இல் லெனின் சோவியத் யூனியனில் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைக்கவில்லையா? என்று சிலர் எதிர்க் கேள்வி கேட்கின்றனர். அதனை விளக்கும் முயற்சிதான் இயதக் கட்டுரை) மனித குல வரலாற்றில் முதன்முறையாக உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை 1917இல் அன்றைய ருஷ்யாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்த சுரண்டல் வர்க்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்தப் புதிய
லெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …
– ஜி.செல்வா ரகசிய உத்தரவு வந்திருக்கிறது. லெனின் யார் தெரியுமா? அவர் இங்கே மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கெள்ளுங்கள். லெனினைப் பிடித்தால் பெரும் பரிசுகள் கிடைக்கும். இது, ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக அப்போதிருந்த பின்லாந்து நாட்டின் கவர்னர் ஜெனரல் தனது தலைமை காவல்துறை அதிகாரியான ரேவியேவிடம் சொன்னது. உத்தரவுகளை உள்வாங்கிக் கொண்டு ரேவியே நேரடியாக ரயில் நிலையம் செல்கிறார். அங்கிருந்த தபால்காரரிடம் கடிதங்களை பெற்று தனது சட்டைப்பைக்குள் செருகிக்கொள்கிறார். மளிகைக் கடைக்கு சென்று பத்து முட்டைகள், ரொட்டி,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



