Category: ஆளுமைகள்
தோழர் சி.எஸ். – ஒரு வரலாற்று பெட்டகம்
கே. பாலகிருஷ்ணன்மாநில செயலாளர் – சிபிஐ(எம்) “ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சி.சுந்தரம் ஐயரின் மகன், சுமார் 30-40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 7 அங்குலம், ஒல்லியான உடல்வாகு, கோதுமை வண்ணம், படிய சீவிய தலை” – ‘சுப்ரமணியம் மற்றும் பி.ராமமூர்த்தி, எஸ்.மோகன் குமாரமங்கலம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரை ராஜதுரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய உதவியாகத் தகவல் தருபவருக்கு ரூ.100 சன்மானம் தரப்படும்” என பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தித்தாளில் இப்படி ஓர் விளம்பரத்தை அளித்திருந்தது.
கார்ல் மார்க்ஸ்
தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இருந்து: நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன்
முற்போக்காளர்களின் பக்கம் நின்றவர் பேரா.சம்பகலக்ஷ்மி
ர. பூங்குன்றன் பேரா.சம்பகலக்ஷ்மியின் இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. 16 வயதில் தந்தை இறந்ததால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவந்தது. குடும்ப பொறுப்புகளோடு தனது படிப்பையும் மேற்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். வைஷ்ணவ படிமக்கலை எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இங்கு இருந்த யாந்திரீகமான ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அவரது அந்த ஆய்வு இருந்தது. வைஷ்ணவ மரபை கொண்டவராக அவர் இருந்ததும் இத்தலைப்பை அவர் எடுப்பதற்கான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
