Category: இந்தியா
ஆர். எஸ். எஸ். – பாஜக ஆட்சி எனும் பெரும் துயரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா 2014ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் இதர பாஜக தலைவர்களும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்ற வகையில் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசினர். போடப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகளில் 31 சதமான வாக்குகளை (மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 25%) ஆதரவும் பெற்று 16ஆம் மக்களவையில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்றது. அனைத்து கருப்பு சொத்துக்களையும் கண்டுபிடித்துக் கைப்பற்றி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொரு வங்கி
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
