Category: கேள்வி – பதில்
உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்கான போராட்டமே முதன்மையானது
பிருந்தா காரத் (நம் தமிழ் ”மார்க்சிஸட்” இதழுக்காக தோழர் பிருந்தா காரத் அளித்த பிரத்யேக பேட்டி) மத்திய ஆட்சியில் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தொடர்வதோடு, சமூகத்தை மத ரீதியாக பிரித்து, தங்கள் அமைப்பை விரிவுபடுத்தியும் வருகிறது. இந்நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எவ்வாறு பார்க்கிறது? எவ்வாறு இவர்களை எதிர்கொண்டு, அவர்களின் விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துவது? மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை அனைத்து வகையிலும் உந்தித் தள்ளுகிறது. 2019 ஆம் ஆண்டு
சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்
சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது.
பதினைந்தாம் நிதி ஆணையம் பற்றிய சர்ச்சை ஏன் எழுந்துள்ளது?
15ஆம் நிதி ஆணையத்தின் பணிபட்டியல் இன்னும் சில ஜனநாயக விரோத அம்சங்களை, மாநில உரிமைகளுக்கு விரோதமான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னொரு சந்தர்ப்பத்தில் மத்திய மாநில உறவுகள் பற்றி விரிவாக விவாதிக்கலாம். ஆனால் தமிழக அரசு பதினைந்தாவது நிதி ஆணையம் மூலம் தொடுக்கப்பட்டுள்ள மாநில உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து இணைந்தோ தனித்தோ குரல் கொடுக்கத்தயாராக இல்லை என்பதை மட்டும் இங்கே பதிவு செய்யவேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



