Category: கேள்வி – பதில்
பாஜக தத்துவமும், அம்பேத்கர் சிந்தனைகளும் ஒன்றிணையுமா?
சங்க பரிவாரம் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வது முற்றிலும் அபத்தமானது. அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு என்று அனைத்து தளத்திலும் அம்பேத்கர் ஆர் எஸ் எஸ் /சங்க பரிவாரத்திலிருந்து முற்றிலும் முரண்படுபவர். முற்போக்கு முகாமிற்கு அவரது சிந்தனைகள் பேராயுதமாக அமையும்.
அரசாங்கங்கள் கடன் வாங்குவது அண்மைக் காலங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இது சரிதானா?
கடன் வாங்குவதற்கு முன், முதலில் செய்ய வேண்டிய காரியம் என்ன? செல்வந்தர்கள், இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகளின் வருமானம், லாபம், சொத்துக்கள் மீது தகுந்த வரி விதித்து அதனை முறையாக வசூல் செய்து நாட்டு வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்ட வேண்டும். இதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அதன் வர்க்க தன்மையை இது வெளிப்படுத்துகிறது.
இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்ட திட்டமிடல் எதுவும் நடந்ததா?
வர்க்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவினரை ஒன்று படுத்தி, போராட்ட வியூகம் வகுக்கப்பட வேண்டும். அவர்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் உறுதிப்படுத்த வேண்டும். இதனை செயல்படுத்தக் கூடிய விதத்தில் இடதுசாரிகள் வலுப்பெற வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



