Category: மகளிர் இயக்கம்
ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
நவபாசிச போக்குகளை எதிர்க்க மகளிர் இயக்கத்தை வலுப்படுத்துவோம்
நாட்டை பாதுகாப்பது, குடும்பத்தை பாதுகாப்பது முக்கியம் என்று கருதும் வலதுசாரி பெண்ணியம், பாசிசத்துடன் கைகோர்க்கும். ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பற்றி எதுவும், முதலாளித்துவத்தில் பெண் உழைப்பு சுரண்டல்கள் பற்றி எதுவும் சொல்லாது. ஆனால், மார்க்சீய பெண்ணியம் அவற்றை பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


