Category: வரலாறு
நவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்!
சோவியத்தின் சாதனைகளைக் கூறி சோவியத் நாட்டிற்கு சென்றுவந்தவர்களின் வாக்கு மூலத் தைக்காட்டி பேசுவதைக் காட்டிலும் நவம்பர் புரட்சி விதைத்த விழுமியங்களை நினைவில் இருத்தி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த விழுமியங்கள் இன்று உலகெங்கிலும் அளவு கோலாக ஒவ்வொரு நாட்டிலும் வெவ் வேறு பெயர்களில் இருப்பதை நாம்அறிவோம். மானுட வளர்ச்சி குறியீட்டென் (Human Developement Index) அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் வலிமையை அளக்கும் நடை முறைக்கு வந்ததே நவம்பர் புரட்சியின் கதிர்வீச்சு செய்த மாயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்
வியட்நாம் என்றாலே எல்லோருக்கும் பளிச்சென்று நினைவிற்கு வருவது அம் மண்ணின் வீரம்; அம்மக்களின் தியாகம்; அதற்கு தலைமைப் பாத்திரம் வகித்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனை நிறுவியவர்களில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், அதன் தலைமைப் பொறுப் பிலிருந்து இயக்கி வியட்நாம் சுதந்திரத்தி லும், சோசலிச நிர்மாணத்திலும் முக்கிய பங்காற்றியவருமான ஹோசிமின்.
நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!
உலகப் புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் கடந்த நூற்றாண்டுகளில், உலகைக் குலுக்கிய ‘இரண்டு’ பத்து நாட்கள் உள்ளன: அவை ஜான் ரீட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு சுட்டுவதைப் போல அக்டோபர் புரட்சியின் 10 நாட்களும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநாடு நடந்த நாட்களும் (1956, பிப்ர வரி 14-25). அதிரடியாகவும், திரும்பப் பெற முடி யாத வகையிலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முன், பின் என்று குறிப்பிடும் வகையில் (புரட்சிகர இயக்கத்தின் வரலாற்றை) மாற்றிவிட்டன. வர லாற்றின் எந்த முக்கிய நிகழ்வும் இதற்கு ஈடாக எந்த நிகழ்ச்சியையும் என்னால் சிந்திக்க முடிய வில்லை. சுருக்கமாகச் சொன்னால், அக்டோபர் புரட்சி, உலக கம்யூனிச இயக்கத்தை உருவாக்கியது, 20 ஆவது மாநாடு அதனை தகர்த்தது”.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


