Tag: ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம்
அமெரிக்காவிற்கு அடிபணியும் மோடி அரசின் அயல்துறைக் கொள்கை
ஜி. ராமகிருஷ்ணன் கடந்த 29.02.2024 அன்று அதிகாலையில் காசா நகரத்தில் வீடுகளை இழந்த, வருவாயை இழந்த பாலஸ்தீன மக்களுக்கு உணவுப் பொட்டலம் ஒரு ட்ரக்கில் வந்திருக்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீன மக்கள் உணவுப் பொட்டலங்களை வாங்கிட அங்கு செல்கிறார்கள். திடிரென்று இஸ்ரேல் ராணுவத்தினர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 112 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காசா – பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலின் தொடர்ச்சிதான் கடந்த 29 ஆம் தேதி நடந்த கோரமான சம்பவம். இத்தகைய சூழலிலும் ஐ.நா.மன்றத்தில் காசா மீது தொடுத்து வரும் தாக்குதலை நிறுத்த வேண்டுமென்று கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் தடுத்துவிட்டது. இத்தகைய தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வருகிறபோது இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைபாட்டை மேற்கொள்ளவில்லை. மாறாக, அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிக்கக் கூடிய நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது. கூட்டுசேராக் கொள்கையிலிருந்து விலகல் தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்கள் நிறவெறிக்கு எதிராக போராடுகிறபோது, பெரும்பான்மையான உலக நாடுகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ஐ.நா. மன்றமும் இனவெறிக்கு முடிவுகட்ட வேண்டுமென்று தொடர்ச்சியாக பல தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்திய அரசு தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக நின்றது. ஐ.நா. மன்றத்திலும் இனவெறிக்கு எதிரான தீர்மானங்களை ஆதரித்தது. 1950களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற வியட்நாம் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் போர் தொடுத்து வியட்நாமின் தென்பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹோ சி மின் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை உலக நாடுகள் ஆதரித்தன. ஐ.நா. மன்றமும் வியட்நாம் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்திய அரசு வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சமரசமின்றி ஆதரித்தது. கூட்டு சேரா நாடுகளின் அமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தென்னாப்பிரிக்க மக்களின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தையும், வியட்நாம் மக்களின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஆதரிக்கக்கூடிய அயலுறவுக் கொள்கையை கடைப்பிடித்தது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து கூட்டுசேரா நாடு கொள்கையிலிருந்து வெகுவாக விலகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் வெளியுறவு கொள்கைகளை ஆதரிக்கக் கூடிய அயல்துறை கொள்கையை கடைபிடித்து வருகிறது. “ஒரு அரசாங்கத்தின் அயல்துறை கொள்கையானது இறுதியாக பார்த்தால் அதன் உள்நாட்டு கொள்கையின் வெளிப்பாடே தவிர வேறு எதுவுமல்ல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது. ஒன்றிய பாஜக அரசு பெருமுதலாளிகள் மற்றும் நிலச்சுவான்தார்களின் நலன்களை பிரதிபலிப்பதோடு, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தின் நலன்களுக்காகவும் செயல்படக்கூடிய அரசாக உள்ளது. பாஜக கட்சி இதர முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ கட்சிகளை போல் அல்ல. இக்கட்சியின் தலைமையிலான அரசு பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய அரசு. நாட்டின் தலைநகரம் டெல்லியாக இருந்தாலும், பாஜகவுக்கு வழிகாட்டுதல் நாக்பூரிலிருந்தே (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் – இந்துத்துவா சக்திகளின் கூட்டுக் களவாணி அரசு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்ணயித்துள்ளது. இதன் பொருள் உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுடைய நலன்களை பாதுகாப்பதோடு, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்றக் கூடிய பாதையில் வேகவேகமாக சென்று கொண்டிருக்கிறது. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டிலிருந்து அமலாக்கப்பட்டு வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள்,
முட்டுச் சந்தில் நிற்கும் நவ தாராளவாதம்!! புறந்தள்ளுமா தெற்குலக நாடுகள்??
ஆர். எஸ். செண்பகம் திவாலுக்கு வந்த நவீன தாராளவாதக் கொள்கைகள் பொருளாதார வளர்ச்சியும், அனைத்து மக்களின் முன்னேற்றமும் வேண்டுமெனில், நவீன தாராளவாதக் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொன்னது இன்று பொய்யாகியுள்ளது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதன் காரணமாக, பெருந்துன்பங்களுக்கு மக்கள் ஆளாவது மட்டுமின்றி, உலக அளவில் பொருளாதார நெருக்கடி நீடித்து நிலைத்து நிற்கிறது. தெற்குலக நாடுகள் உலகளாவிய கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. வருமான ஏற்றத்தாழ்வுகள், பொருளாதாரச் சுரண்டல்கள், செல்வாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏராளமான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
