Tag: சிவப்பு புத்தக தினம்
பிப். 21 – சிவப்புப்புத்தக தினம்: வாசிக்கவிருக்கும் புத்தகம் : “கூலி உழைப்பும் மூலதனமும்”
“கூலி உழைப்பும் மூலதனமும்” என்ற நூலின் சிறப்பு, மார்க்ஸ் ஒரு தத்துவ ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு பத்திரிக்கையாளராக, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் இந்நூலை எழுதினார் என்பதும்தான்!
புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன் (டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது) மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது. நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள்
கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் : பகுதி 1 (சுருக்கம் மற்றும் ஒலி நூல்)
கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாய் அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


