Tag: சீத்தாராம் யெச்சூரி
சாதியும் வர்க்கமும்
முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதீய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, சாதீய உறவுகள் ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் உருவாக்கப்பட்டது. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதீய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை) இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே, சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில்
மார்க்சிய தத்துவ ஆசான் யெச்சூரிக்கு செவ்வணக்கம்!
ச. லெனின் தோழர் யெச்சூரிக்கு இருந்த ஆழ்ந்த சித்தாந்த தெளிவும், செயலாற்றலும், மிக இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் உயர்பொறுப்பிற்கு அவர் வருவதற்கு ஆதாரமாக அமைந்தன. அந்த அடித்தளமே அவர் கொள்கை உறுதியோடு இறுதிவரை செயலாற்ற வழிவகுத்தது. “மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெறவேண்டும்” என்ற மாவோவின் கருத்தை யெச்சூரி தனது எழுத்துகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோ முன்வைத்த வழிகாட்டுதலின் வழிபட்டே யெச்சூரியின் மார்க்சிய நிபுணத்துவம் வெளிப்பட்டது. ”இயக்கவியல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

