Tag: தமிழகத் தத்துவம்
மார்க்சிய ஆய்வு தடத்தில் இந்திய, தமிழக தத்துவங்கள்
என். குணசேகரன் இந்திய, தமிழக தத்துவ சிந்தனை, ஆன்மீகம், இறையியல், மற்றும் கடவுள் சார்ந்ததாக மட்டும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “இந்திய தத்துவம் எனப்படுவது, சாரம்சத்தில் ஆன்மீக தத்துவமே” என்று இந்திய தத்துவத்தைப் பற்றிக் கூறியிருந்தார். அதனைப் பின்பற்றி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் பரிணமித்த பன்முக தத்துவ சிந்தனைகள் முழுவதையும் ஆன்மீக சிந்தனைகளாக சித்தரிக்கும் நடைமுறை நீடித்து வந்தது. ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்கள், மதக் கோட்பாடுகள் போன்றவையே தமிழக
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
