Tag: மார்க்சிஸ்ட் கட்சி
வெண்மணியின் குரலாய் சட்டமன்றத்தில் சங்கரய்யா
கீழ்வெண்மணி படுகொலை தொடர்பாக “தஞ்சை மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு தவறியது; கீழ்வெண்மணி கிராமத்தில் தீவைப்பால் பலர் உயிரிழந்தது குறித்த அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கும்” ஒரு கண்டனத் தீர்மானத்தை , காங்கிரஸ் கட்சி முன்மொழிந்தது. அதன் மீது 1969 பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தோழர் சங்கரய்யா ஆற்றிய உரையை வெண்மணி நினைவு தினத்தை ஒட்டி இங்கு பிரசுரிக்கிறோம். – ஆசிரியர் குழு திரு. என். சங்கரய்யா :
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக
கலாச்சார அரங்கில் கட்சியின் கடமைகள்
எம். ஏ. பேபி(அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) 1. ஐந்தாண்டுகளுக்கு முன்பு, 2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் ‘கலாச்சார அரங்கில் நமது கடமைகள்’ என்ற ஆவணம் நிறைவேற்றப்பட்டது. 2. இந்த ஆவணத்தைப் புரிந்து கொண்டு உள்வாங்கவும், பல்வேறு மாநிலங்களில் அதைச் செயல்படுத்தவுமான முயற்சிகள் தொடர்கின்றன. மற்ற இந்திய மொழிகளோடு கூடவே, இந்தியிலும் இந்த ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மட்டங்களில், இந்த ஆவணம் குறித்து, செயல்பாட்டாளர்களிடையே எடுத்துக் கூறும் பணி,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
