Tag: முதலாளித்துவ எதிர்ப்பு
சமகால பொது வேலைநிறுத்தத்தின் புதிய அரசியலைப் புரிந்துகொள்ளுதல்
முதலாளித்துவ விமர்சகர்களும், அதன் ஊதுகுழல்களாக இருப்பவர்களும், எப்போதும் பொது வேலைநிறுத்தங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களை பரப்புவதன் மூலம், அதன் பார்வையை நீர்த்துப்போகச் செய்ய முயன்றுள்ளனர்; அவர்களில் பாதி பேர் அதன் வெற்றி குறித்து கேள்விகளை எழுப்புகையில், மீதமுள்ளவர்கள், அதனால் “பாதிக்கப்பட்ட” ஏழை மக்களின் பொருளாதாரம், வாழ்வாதார இழப்பு ஆகியவை குறித்து புலம்புகின்றனர். அவர்களின் பாசாங்குத்தனத்திற்கும் கோபத்திற்குமான ஒரே பதிலாக அமைவது, வர்க்க உணர்வின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளின் மூலம் வர்க்கத்தின் பலத்தை வெளிப்படுத்துவதேயாகும்.
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
மோடியின் நிகழ்ச்சி நிரலா? மக்களின் நிகழ்ச்சி நிரலா?
என். குணசேகரன் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது நிகழ்ச்சி நிரலை அக்கட்சியால் தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? பாஜகவின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கும் தொலைநோக்கு இலட்சியத்தின் சில திட்டங்களை மோடி அரசு அமலாக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரம் அதற்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், மதசார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்டு இந்தியா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

