Tag: மோடி ஆட்சி
மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பெண்களின் நிலை
பேரா. ஆர். சந்திரா மானுட விடுதலை என்பது பெண்களின் விடுதலையுடன் இணைந்தது. சமுதாயத்தின் ஒரு பாதியாக இருக்கும் பெண்கள் ஒடுக்கப்படும் வரை, மானுட விடுதலை சாத்தியம் இல்லை என்பதை மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஒரு சமுதாயம் முன்னேறுவதை கணிப்பதற்கு அங்கே வாழும் பெண்களின் அந்தஸ்தை ஓரு சிறந்த அளவுகோலாக கருத வேண்டும். விடுதலை போராட்டமும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் சுதந்திர இந்தியாவில் மக்கள் இயக்கங்களும் இந்தியாவில் பெண்கள் நிலையில் முன்னேற்றத்தை முன்னெடுத்துள்ளன. பெண்கள்
மாற்றப்படும் குடியரசின் குணாம்சம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக அரசின் இரண்டாவது பதவிக்காலம் நிறைவடைந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நாடும், நாட்டு மக்களும் சந்திக்க உள்ளனர். பத்தாண்டு காலமும் கார்ப்பரேட் மதவெறி கூட்டணி அரசாகத்தான் இது செயல்பட்டு வந்துள்ளது. பாஜகவை ஒரு சராசரி முதலாளித்துவ கட்சி எனப் பார்க்க இயலாது. அது பாசிச பாணி ஆர்.எஸ்.எஸ்சின் ஓர் அரசியல் அங்கம். ஆர் எஸ் எஸ்.சின் நிகழ்ச்சி நிரலை அரசியல் தளத்தில் அமலாக்கம் செய்வதுதான் பாஜகவின் ஆகப் பெரிய கடமை.
அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்
பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித் தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல் தான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
