Tag: வெங்கடேஷ் ஆத்ரேயா
இன்றும் வழிகாட்டும் தோழர் லெனின்
2024: லெனின் நினைவுநூற்றாண்டு பேரா. வெங்கடேஷ்ஆத்ரேயா அறிமுகம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிநின்று மார்க்சீயத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் இடைவிடாமல் தனது அரசியல் வாழ்வில் முன்பின் முரணின்றி பின்பற்றிய மாமேதை தோழர் லெனின் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று மறைந்தார். அதன்பின் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. லெனின் காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் வாழும் உலகம் பிரும்மாண்டமான மாற்றங்களை கண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் பாய்ச்சல்வேக வளர்ச்சி மனிதர்களின் வாழ்விலும், சமூகங்களின் தன்மைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம்
2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து
பட்ஜெட்டில் எந்த திசைவழியில் தமிழக பொருளாதாரம் செல்லவேண்டும், மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை எது, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் பட்ஜெட் எத்தகைய பங்கு ஆற்ற முடியும் போன்ற கேள்விகள் குறித்து ஆழமான சிந்தனைகள் எதுவும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில ஒதுக்கீட்டு மாற்றங்கள், கவனம் ஈர்க்கும் ஓரிரு சேமநல திட்டங்கள் என்ற வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சவால்கள் பற்றியோ எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாத, ஃபிஸ்கல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, செலவுகளை சுருக்கி எப்படியோ சமாளிப்பது என்ற பாணியில் பட்ஜெட் அமைந்திருப்பதால், மாற்று சிந்தனைகளுக்கு, முனைவுகளுக்கு இடமே தராத, ‘திக்கு தெரியாத காட்டில் பயணம்’ போலவே நிதி அமைச்சர் பயணித்துள்ளார்.
அதானி ஊழல், குற்றவாளிக் கூண்டில் கார்ப்பரேட்-இந்துத்துவா அரசு!
பொதுத்துறையை நாசமாக்கி அடிமாட்டு விலைக்கு விற்க வெறிபிடித்து அலையும் ஒன்றிய அரசு அதற்குப் பதில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் வருடம் தோறும் ஈட்டும் உபரிகளை ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மக்கள் நல முதலீடுகளுக்கும் பயன்படுத்த மறுக்கிறது?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
