Month: March 2025
புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன் (டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது) மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது. நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள்
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மத்தியகட்சிகல்விபாடக்குறிப்பு (பகுதி -4)
4. வரலாற்று அணுகுமுறை வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்) தோற்றம்,
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
