Category: ஏகதிபத்தியம்
சீனாவின் “இரண்டு அமர்வுகள்” 2025 – சோசலிச ஜனநாயகத்தின் வெளிப்பாடு
அபிநவ் சூர்யா அண்மையில் சீன அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் “இரண்டு அமர்வுகள்” என்ற நிகழ்வு நடந்து முடிந்தது. இது “இரண்டு அமர்வுகள்” என்று அழைக்கப்படுவதற்கு காரணம், சீனாவின் தேசிய மக்கள் மன்றமும் (NPC), சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மன்றமும் (CPPCC) ஒரே நேரத்தில் அமர்வுகளை நடத்துவதுதான். தேசிய மக்கள் மன்றம்தான் சீனாவின் உச்சபட்ச அரசு அமைப்பாகும். கிராமங்கள் முதல் மாகாணங்கள் வரை மக்களாலும், மக்களின் பிரதிநிதிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து
ஒரு சோஷலிச உலகம் சாத்தியமே! அந்தஉலகை வென்றடையப் போராடுவோம்!
டாக்டர் அசோக் தவாலே (மார்ச் 16, 2025 அன்று லண்டன் ஹைகேட் கல்லறை வளாகத்தில் உள்ள கார்ல் மார்க்ஸ் நினைவுச் சதுக்கத்தில் டாக்டர் அசோக் தவாலே ஆற்றிய நினைவு சொற்பொழிவு) 142 ஆண்டுகளுக்கு முன்பு, 1883 மார்ச் 17 அன்று, பாட்டாளிகளின் மகத்தான தலைவரான பிரெடரிக் எங்கெல்ஸ், நாம் நின்று கொண்டிருக்கின்ற இந்த இடத்திற்கு அருகில்தான், தன் நெருங்கிய தோழரும் நண்பருமான மார்க்ஸின் கல்லறையின் முன்பாக அஞ்சலி செலுத்தும் தறுவாயில் “அனைத்திற்கும் முன்னதாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளராக
டீப்சீக்கும் – பங்குச் சந்தையும்
பிரசன்ன வெங்கடேஷ் முதலாளித்துவத்தில் தொழில்நுட்பம் “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது.” என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். சந்தையைக் கைப்பற்ற தங்களுக்குள் நிலவும் போட்டியில் முதலாளிகளும் அவர்களது நிறுவனங்களும் உற்பத்தி கருவிகளின் திறனை மேம்படுத்துவதில் எப்போதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டே இருப்பர். ஒவ்வொரு நிறுவனமும் முதலீடு மற்றும் லாபத்தின் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்கி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
