Category: சாதி
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

