Category: வரலாறு
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத் தமிழாக்கம்: சேலம் சோபனா (ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை ) மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான
தோழர் சி.எஸ். – ஒரு வரலாற்று பெட்டகம்
கே. பாலகிருஷ்ணன்மாநில செயலாளர் – சிபிஐ(எம்) “ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சி.சுந்தரம் ஐயரின் மகன், சுமார் 30-40 வயது மதிக்கத்தக்கவர், உயரம் 5 அடி 7 அங்குலம், ஒல்லியான உடல்வாகு, கோதுமை வண்ணம், படிய சீவிய தலை” – ‘சுப்ரமணியம் மற்றும் பி.ராமமூர்த்தி, எஸ்.மோகன் குமாரமங்கலம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரை ராஜதுரோக குற்றத்தின் கீழ் கைது செய்ய உதவியாகத் தகவல் தருபவருக்கு ரூ.100 சன்மானம் தரப்படும்” என பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தித்தாளில் இப்படி ஓர் விளம்பரத்தை அளித்திருந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
