Author: Editorial
இடது ஜனநாயக முன்னணியும் இன்றைய அரசியல் நடைமுறை உத்தியும்
நாடு முழுவதிலும் வலுவானதொரு கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பது அவசியமாகும். ஸ்தாபனம் குறித்து கல்கத்தா ப்ளீனம் மேற்கொண்ட முடிவுகளை உண்மையாக அமலாக்குவதன் மூலம் மட்டுமே மார்க்சிய-லெனினியத்தின் அடிப்படையில் அமைந்த வெகுஜன அடித்தளத்துடன் கூடிய வலுவானதொரு கட்சியை நம்மால் கட்டியெழுப்ப முடியும்.
சி.பி.ஐ(எம்) கட்சி திட்டம் குறித்த சிறு குறிப்பு …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவாக்கப்பட்ட 1964ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கல்கத்தாவில் நடைபெற்ற 7வது கட்சி மாநாட்டில், கட்சித் திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1992ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 14 ஆவது கட்சி மாநாடு 1990களில் சர்வதேச மற்றும் தேசிய நிலைமைகளில் ஏற்பட்ட முக்கியமான மாறுதல்களின் பார்வையில் கட்சியின் திட்டத்தை காலப்படுத்துவது என்ற முக்கியமான முடிவை எடுத்தது. மூன்று மாத காலம் நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான உட்கட்சி விவாதங்களுக்கு பின்னர், 2000ஆம் ஆண்டில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கட்சியின் திட்ட ஆவணம் காலப்படுத்தப்பட்டது.
கல்வி, இந்துத்வா மற்றும் தேசியக் கல்விக் கொள்கை
தே.க.கொ. 2020 நடைமுறைக்கு வந்ததிலிருந்து, கடந்த இரண்டு வருடங்களாக, கொள்கையின் முன்னுரிமைகள் எவை என நாம் காணமுடிகிறது. கல்வியை தனியார்மய/வணிகமயமாக்குவதற்கான மூர்க்கமான முயற்சிகளால், அரசின் நிதி உதவி பெறும் கல்வி தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது வெட்கக்கேடானது. இணையவழிக்கல்வி அறிமுகமானது, தனியார்மயத்தை நோக்கிய மிகப்பெரிய நகர்வாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
