Author: Editorial
இந்துத்துவ சக்திகள் இந்திய வரலாற்றில் செய்யும் திரிபுகள்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு கடந்த பல வருடங்களாகவே, இந்துத்துவா-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் வரலாற்றை தங்களின் பிரச்சாரத்திற்கான முக்கியக் கருவியாக மாற்றியுள்ளன. தொல்லியல் ஆய்வுகள், கல்வெட்டுகள், நாணயவியல், ஆவணகாப்பக ஆதாரங்கள் மற்றும் இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்து, வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றை சிதைக்க, அவர்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய முயற்சிகள் எப்போதும் வரலாற்றை சிதைத்து புதிர்மயமாக்குகின்றன, அதனால் சிறந்த மாணவர்களால் கூட புராண புனைவுகளை வரலாற்றிலிருந்து பிரிக்க முடியவில்லை. சமீபகாலமாக, நமது
வள்ளலார் – 200: சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்
வர்ணங்களின் அடிப்படையில்தான் பிறப்பு நிகழ்கிறது. ஒருவர் தான் நினைத்தாலும், வர்ணங்களை மாற்ற முடியாது. ஏன் வர்ணங்களை படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் மனுதர்மம். அதுதான் சனாதானத்தின் அடிப்படை. இதை எதிர்த்த வள்ளலாரை, சனாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று அழைப்பதன் மூலம் அவரை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்ய துடிக்கின்றனர்.
தமிழக தத்துவ சிந்தனை: தொடக்ககாலபொருள்முதல்வாதம்
தமிழகத்தில் தொன்று தொட்ட காலம் முதலே தத்துவ சிந்தனைகள் நீடித்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். தொன்மைக்காலம் தொட்டு உற்பத்தி மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஊடாக, தத்துவ சிந்தனையும் இருந்து வந்துள்ளது. எனவே தமிழக சிந்தனையில் தத்துவம் உள்ளதா, இல்லையா என்று கேட்பதை விடவும், தமிழக தத்துவ சிந்தனையில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் இரண்டும் எவ்வாறு இடம்பெற்று வந்தன என்ற கேள்விதான் முக்கியமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
