பட்ஜெட் திசை மாறவில்லை!
இந்த ஆண்டு (2005-06) பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்த போதினிலே திருக்குறளும் தேனாக வந்து பாய்ந்தது காதினிலே என்று கூறுவோரும், இடதுசாரிகள் முன்வைத்த ஆலோசனைகளில் அழுத்திக் கூறிய கிராமப்புற வேலைவாய்ப்புகள், சமூக கட்டமைப்பை வளர்க்கும், கல்வி, சுகாதாரம் ஆகியவைகளுக்கு குறிப்பிட்டு நிதி ஒதுக்கியதை பாராட்டியோரும் இடதுசாரி கட்சிகளின் உணர்வை பிரதிபலிக்கும் குறளையும், அமர்த்தியா சென்னின்* கூற்றையும் ஓதியதை கேட்டு வரவேற்றோரும் பட்ஜெட் பழைய திசையிலே போகிறது அது மாறாமல் இந்த ஒதுக்கீடுகள் பலன் தராது என்று அழுத்தியே கூறுகின்றனர்.
கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து!
டெல்லியில் வருகிற 6 – 11, 2005 இல் நடைபெறவுள்ள கட்சியின் 18-வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் மற்றும் ஸ்தாபன அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் 2002 இல் நடைபெற்ற கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அரசியல் – பொருளாதார நிலைமையை பரிசீலித்து, எதிர்கால அரசியல் அணுகுமுறையையும், எதிர்கால கடமைகளையும் உள்ளடக்கி அரசியல் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்ற உள்ளது. மேலும் 17வது மாநாடு
காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்
மத்திய அரசு டிசம்பர் 2004ல் ஒரு அவசர சட்ட பிரகடனத்தின் மூலம் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970ல் (3வது – திருத்த) மசோதாவை பிறப்பித்துள்ளது. இப்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை ஒரு சட்டமாக கொண்டுவர மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மருந்து, இரசாயனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துத் துறையை பொறுத்தவரையில் இதுவரை பின்பற்றி வந்த செய்முறை காப்புரிமை பொருள் காப்புரிமையாக மாற்றப்படும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
