சுற்றுப்புற சூழல் பாதுகாப்பும் தத்துவார்த்த அணுகுமுறைகளும்
இன்று நமது நாட்டில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பென்பது தன்னார்வ குழுக்களின் அரசியல் சார்பற்ற பணிகளாக கருதப்படுவது பரவலாக உள்ளது. சுகாதாரமற்ற மக்கள் தாங்களாக திருந்தி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைக்குமளவிற்கு உயர்த்திட இதுதான் வழியென்று ஆளுவோரும், அதிகாரிகளும் பறைசாற்றுவதையும் காணலாம். இதே கும்பல் சுத்தமும், அசுத்தமும், பண்பாட்டு சமாசாரம் என்று ஒரு தத்துவத்தையே முன்வைப்பர்! இந்த தன்னார்வ குழுக்களும் அவர்களின் கொடையாளிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கோடு இயங்குவதால் ஒருதலைப் பட்சமான கருத்துக்களே மக்களை சென்றடைகிறது. விஞ்ஞான உலகில் நடைபெறும் சர்ச்சைகளை
பங்குச் சந்தை: பொருளாதரத்தை கணிக்கும் கருவியா?
பங்குச் சந்தையை ஊட்டம் கொடுத்து வளர்த்து, அதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் நிதியமைச்சருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சந்தை ஏற்கனவே ஏறுமுகமாக உள்ளது. பலர் தேசத்தின் பொருளாதார நிலையை பங்குச் சந்தை பிரதிபலிப்பதாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். பல இந்திய நிபுணர்களின் கணிப்புப்படி நியூயார்க் பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கும், அல்லது சிகாகோ வர்த்தக குழுமத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பு எதுவோ அது அப்படியே நம்நாட்டு பங்கு சந்தைக்கும்
மக்கள் ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகளின் பிரச்சனை கேந்திரமானேதோர் பங்கினை வகிக்கிறது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தினுடைய சாம்பல்களிலிருந்து தான் முதலாளித்துவ அமைப்பானது உருவாக்கப்பட்டது. புதிதாக வளர்ந்தோங்கி வந்த முதலாளித்துவ வர்க்கமானது முந்திய சமூக அமைப்பை அழித்தொழித்து விட்டு அந்த இடத்தில் தங்களுடைய முதலாளித்துவ சமூக அமைப்பை நிலைநாட்டிக் கொண்டது. ஆனால் இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ அமைப்பானது இதற்கு முந்தியிருந்த சமூக அமைப்பின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அது தான் நிதர்சனமானதோர் வரலாற்று உண்மையாகும் கட்சித்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
