2004-2005 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை: தொடரும் புதிய தாராளவாதம்
அறிமுகம் ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. சாதாரணமாக, மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி கடைசி தேதியில் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு ஒரு வாரம் அல்லது சில நாட்கள் முன்னதாக மக்களவை கூடுகிறது. அச்சமயம் மத்திய அரசின் நிதியமைச்சகத்தால் தயார் செய்யப்பட்ட நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஆய்வு அறிக்கை மக்களவையில் அரசு தாக்கல் செய்யும் பொருளாதார ஆய்வு அறிக்கை நடப்பு ஆண்டில் நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள
பட்ஜெட் திசை மாறவில்லை!
இந்த ஆண்டு (2005-06) பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்த போதினிலே திருக்குறளும் தேனாக வந்து பாய்ந்தது காதினிலே என்று கூறுவோரும், இடதுசாரிகள் முன்வைத்த ஆலோசனைகளில் அழுத்திக் கூறிய கிராமப்புற வேலைவாய்ப்புகள், சமூக கட்டமைப்பை வளர்க்கும், கல்வி, சுகாதாரம் ஆகியவைகளுக்கு குறிப்பிட்டு நிதி ஒதுக்கியதை பாராட்டியோரும் இடதுசாரி கட்சிகளின் உணர்வை பிரதிபலிக்கும் குறளையும், அமர்த்தியா சென்னின்* கூற்றையும் ஓதியதை கேட்டு வரவேற்றோரும் பட்ஜெட் பழைய திசையிலே போகிறது அது மாறாமல் இந்த ஒதுக்கீடுகள் பலன் தராது என்று அழுத்தியே கூறுகின்றனர்.
கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து!
டெல்லியில் வருகிற 6 – 11, 2005 இல் நடைபெறவுள்ள கட்சியின் 18-வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் மற்றும் ஸ்தாபன அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் 2002 இல் நடைபெற்ற கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அரசியல் – பொருளாதார நிலைமையை பரிசீலித்து, எதிர்கால அரசியல் அணுகுமுறையையும், எதிர்கால கடமைகளையும் உள்ளடக்கி அரசியல் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்ற உள்ளது. மேலும் 17வது மாநாடு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
