Tag: மார்க்சிஸ்ட்
மார்க்ஸ்: ‘வேலை நாளும்’ வர்க்கப் போராட்டமும்
வேலைநாள், குறைந்தபட்சக் கூலி, கூட்டுப்பேரம் ஆகிய விதிமுறைகள், அறம் சார்ந்தோ நாகரிக நீதி கருதியோ முதலாளி வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இந்த விதிகளை மீறும் நிலையிலும், அத்தகைய வேலைச் சூழ்நிலைகளில் மனித உரிமை மீறல்கள் ஏற்படும் நிலையிலும், முதலாளிகளின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் அவற்றுக்கெதிராகக் குரல் எழுப்பபடுவதும் மிக அரிதாகவே உள்ளது.
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது
மேலைநாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாத தெற்குலகம்
மேலைநாடுகள் தரும் அழுத்தங்களால் ஏற்படுகிற விரக்தி ஒருபுறம், ரஷ்யாவுடன் சீரான உறவைப் பேணுவதால் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் மறுபுறம் என்றிருக்கும் இன்றைய யதார்த்தச் சூழலிலேயே, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு வாஷிங்டன் தரும் நெருக்கடியைப் புறந்தள்ளி, அலட்சியம் செய்து வருகின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
