Category: இந்துத்துவா
ஆர்.எஸ்.எஸ் 100: பாசிச அடித்தளமும், செயல்திட்டமும் !
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளில், இன்னுமொரு அரசியல் கட்சியாகவே ‘பாஜக’வை பலரும் பார்க்கிறார்கள். ஆனால் “பாஜக சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) வழிநடத்தப்படும், ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தமது கருவிகளாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொள்ள முடிகிறது
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்
ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத்துவா சித்தாந்தம், முதலாளித்துவ சார்பு மற்றும் பெருமுதலாளிகளின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ஆர்எஸ்எஸ் “இந்து சமூகத்திற்கு” தான் சேவை செய்வதாக பிரச்சாரம் செய்தாலும், அது உண்மையில் இந்து பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்குத்தான் சேவை செய்கிறது; சாதாரண இந்து தொழிலாளி அல்லது விவசாயியின் நலன்களுக்கு அல்ல.
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளை, மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும், அதேசமயம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் சுரண்டும் வர்க்கங்களிடம் இருந்தே வரும், நவீன தாராளமய காலகட்டம், குறிப்பாக சர்வதேச நிதி மூலதன வளர்ச்சியின் அழுத்தம், இந்தத் திசை நோக்கி நிகழ்ச்சிப் போக்குகளைத் தள்ளுகிறது, இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அவசியம் என்பதே கட்சித் திட்டத்தின் சாராம்சம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



