Category: ஆளுமைகள்
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
ஜூன் 18: மாக்சிம் கார்க்கி நினைவு தினம் வீ. பா. கணேசன் ஜார் ஆட்சியின் கீழ் சிதலமடைந்து கொண்டிருந்த சமூகத்தைச் சித்தரிப்பதில், ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்களாக இருந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் புஷ்கின், லெவ் டால்ஸ்டாய், பியோடர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்ற பலரும் தங்களுக்கேயுரிய வகையில் தனித்துவம் பெற்றிருந்தனர். இதற்கு மாறாக, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, வளரும் சிறுவயதிலேயே உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட மாக்சிம்
புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன் (டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது) மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது. நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
