காஸ்த்ரோ நூற்றாண்டை நோக்கி…கூபாவின் விடுதலை: காஸ்த்ரோ முன்வைத்த ஜூலை 26 இயக்கத்தின் திட்டங்கள்
சமகால உலகில் 65 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்து தனது சோசலிச அமைப்பை பாதுகாத்து முன்னேறி வரும் கூபப் புரட்சியின் வரலாற்றில் 1953 ஆம் ஆண்டு ஜூலை 26 என்பது மிகவும் முக்கியமான நாள். அன்றுதான் பாடிஸ்டா என்ற சர்வாதிகாரியின் ஆதிக்கத்தில் இருந்த மக்களை விடுவிக்க போராடிக் கொண்டிருந்த கூபாவின் இளம் முற்போக்கு சக்திகளான ஜூலை 26 இயக்கத்தினர் கூபா அரசின் ராணுவ தளங்களில் முக்கியமான ஒன்றான மான்கடா முகாமின் மீது ஆயுதம் தாங்கிய தாக்குதலை மேற்கொண்டனர். அத்தாக்குதல், பாடிஸ்டாவின் படைகளால்
கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; தாரளமய கொள்கைகள் தீவிரமாக அமலாகும் சூழலில் அதற்கு எதிரான திசைவழியில் கேரளாவின் LDF அரசாங்கம் செயல்படுவது மட்டுமல்ல; பல வரையறைகள் இருந்தாலும், அவற்றையும் மீறி மாற்று பொருளாதார சமூக கொள்கைகளை LDF அரசாங்கம் அமலாக்குகிறது. LDFஇன் இந்த கடும் போராட்டம் இரு கூறுகளை கொண்டது. ஒன்று, LDF அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான, சட்ட ரீதியான தலையீடுகள் எனில், இன்னொன்று உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள்.
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
