Tag: மார்க்சியம்
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான
ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத் தமிழாக்கம்: சேலம் சோபனா (ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை ) மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான
டிஜிட்டல் பொருளாதாரத்தில் பணி உறவுகள் மற்றும் ஒழுங்குமுறையில் உள்ள சிக்கல்கள்
ஆர். எஸ். செண்பகம் 2025ஆம் ஆண்டில், 850 லட்சம் வேலைகள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான உழைப்புப் பிரிவின் மாற்றத்தால் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும், 970 லட்சம் புதிய வகை வேலைகள் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரித முறைகளுக்கு இடையிலான புதிய உழைப்புப் பிரிவுக்கு ஏற்றதாக மாற்றமடையச் செய்யப்படும் என்றும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில், மனிதனும் இயந்திரமும் சமமான நேரத்தை வேலையில் செலவிடுவார்கள் எனவும், உலகப் பொருளாதார மன்றம் (WEF) மதிப்பிட்டுள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
