Category: சமூகம்
இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள சமூக நீதி அம்சங்கள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா முன்பின் முரணற்ற இடதுசாரி நிலைப்பாடு பெரியார் ஒரு மிகச்சிறந்த சமூக செயல்பாட்டாளர். இந்திய சமூகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்தவர். பெரியார் மகத்தான பணிகளை நம்மிடையே செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையைக் கடுமையாகச் சாடினார். சாதி ஒடுக்குமுறை, சமத்துவம், பாலின சமத்துவம் பற்றி அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தில் பெரியாருக்கு நிகர் பெரியார் தான். மிகச்சிறந்த அறிஞர்கள், சமத்துவத்திற்காக போராடியவர்கள் என்கிற பட்டியலில் பெரியார், அம்பேத்கர், போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம்,
நீலகண்ட சாஸ்திரிக்கு அப்பால்: திராவிட-ஆரியக் கதையாடல்கள் ஒரு மீள்பார்வை
டாக்டர்.ஜே. ரவிக்குமார் ஸ்டீபன் அறிமுகம் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியின் 1964ஆம் ஆண்டு உரையை தி இந்து நாளிதழ் இத்தருணத்தில், குறிப்பாக, சமீபத்தில் ஏராளமான ஆய்வுகள் வெளிவரும் இத்துறையில், மீளாய்வுக்குத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது விதந்தோதத் தக்கதாக உள்ளது. சமகால ஆய்வுகள் மானுடவியல் மரபியலில் புதிய வெளிச்சத்தை வழங்கியுள்ளன. ஹோமோ சேபியன்ஸ் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன. பேராசிரியர் டாக்டர் ஆர். பிச்சப்பனின் ஆய்வுகள், எல்1 ஹாப்லோ குழுவுடன் நாடார், ஈழவர், திய்யா ஆகிய சமூகங்களை இணைக்கும்
ஏகபோகங்களின் – நாசகர முதலாளித்துவ முற்றுகைக்குள் இந்தியா
ஆர். கருமலையான் இந்தியாவில், சொத்து ஒரு சிலரின் கைகளில் குவிவதும், திரள்வதும் வேகமெடுத்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை உயர்வதும், சொத்தின் அளவு உயர்வதையும் பூர்ஷூவா ஊடகங்கள், சாதாரண மக்களிடம், ‘தேசத்தின் பெருமை’ போல சித்தரிக்கின்றன, மக்களின் வருமானமும் நுகர்வு மட்டங்களும் மிகுந்த வேகத்தில் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த அருவருப்பான நிகழ்வு,பொருளாதார வளர்ச்சி என்று மோடியாலும் அவரது கூட்டத்தினராலும் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அதிகரித்துக் கொண்டிருக்கும் துயரங்களை, வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு ‘தேவைப்படும் தியாகம்’ என
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
